ஆதி அருணாசலமே போற்றி!

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே 
  அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் 
  புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த 
  செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே!!!


Comments